பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை, டிசம்பர் 20

கோவையில் பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் பீளமேடு அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று திடீரென் மாயமாகினர்.

இது தொடர்பாக மயாமான பள்ளி மாணவியின் தந்தை பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவிகள் இருவரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த ஆசிக் (26) என்ற வாலிபர் மாணவிகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அந்த வாலிபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் நீலகிரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். 

இதனை தொடர்ந்து, நீலகிரிக்கு சென்ற போலீசார் கூடலூரை அடுத்த தொப்பக்காடு என்ற பகுதியில் இருந்த அந்த இரண்டு மாணவிகளையும் மீட்டனர். 

விசாரணையில் ஆசிக் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், மாணவிகளை கடத்திச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.

இந்த சூழலில், கடத்தப்பட்ட இரண்டு மாணவிகளையும் மீட்ட போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் ஓப்படைத்தனர். மேலும், அந்த வாலிபரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...