காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

டிசம்பர் 20

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள 4 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் வடக்கு எல்லைப் பகுதியின் அருகில் மூன்று ராணுவ வீரர்கள் கடந்த டிசம்பர் 13ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்குப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு இருந்த 3 வீரர்களும் சிக்கினர். இதனிடையே, அன்றைய தினமே குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கினர்.

இதனைத்தொடர்ந்து, பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் ஒருவர் என். மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர் ஆவார்.

 ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது குறித்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...