பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு போராட்டம்

கோவை, டிசம்பர் 20

முழுநேர அரசு ஊழியராக்குதல், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழரை மணிநேரத்திற்கு மேலாக, கடந்த 35 ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 21 மாதங்களுக்கு ஊதியக்குழு அறிவிப்பின்படி, நிலுவைர்த தொகை வழங்க வேண்டும், சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும், பள்ளிகளில் வழங்குவதுபோல, அங்கன்வாடிகளுக்கும் கோடைவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். 



மாநில செயற்குழு முடிவின்படி, நடைபெற்ற முதலமைச்சரின் கவனஈர்ப்பு மாலைநேர ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்கத்தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலுமங்கை, செயலாளர் ஸ்டெல்லா, துணைத்தலைவர்கள் சித்ரா, பூங்கொடி, சரஸால், வேலுமணி மற்றும் இணைச்செயலாளர்கள் சாரதா, பாக்கியம், மாலினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...