ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது : மத்திய அரசு

டிசம்பர் 22 

2,000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மாறாக, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்தே, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியது. மத்திய அரசு திரும்பப்பெற இருப்பதாகத் தகவல் வெளியாகின. ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்தது. 

இந்நிலையில், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதையும், புதியதாக அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்தலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய அரசு புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெறுகிறது எனத் தகவல்கள் பரவியது. அதனை மத்திய அரசு மறுத்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “யூகங்கள் உருவாகி வருகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் தவறானவை. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் இதனை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்றார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...