இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

கோவை, டிசம்பர் 23

கோவையில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.



கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி, கிறிஸ்துவர்கள் இல்லங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மற்றும் சான்டாகிளஸ் போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள பாப்பிஸ் ஹோட்டல், டிரீம் ஃப்ளவர் ஈவென்ட்சுடன் இணைந்து மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். சுமார் ஒரு வார காலத்தில் 1.2 டன் எடையுடைய 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை 30 பேர் கொண்ட குழு உருவாக்கி உள்ளனர். மின் விளக்குகள் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்புடைய பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுள்ளது.



இது தொடர்பாக, பாப்பிஸ் ஹோட்டல் குழுமம் செயற்பாட்டு மேலாளர் ஜெயராமன் கூறுகையில், திட்டமிடல் முதல் வரைதல் மற்றும் மரத்தை உருவாக்குதல் வரை எங்கள் அணி படிப்படியாக வேலை செய்தது. கோவையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும், கின்னஸ் உலக சாதனைப் பதிவில் எங்களது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த முயற்சி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னர், மும்பையின் வர்லி நகரில் உள்ள ஒரு தனியார் சமுதாயம் 56 அடியிலும், 2014-ம் ஆண்டில் ஷாப்பர் ஸ்டாப் லிமிடெட் 40 அடி உயரத்திலும் கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கியிருந்தன. தற்போது, இந்தச் சாதனைகளை பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் உடைத்துள்ளது. இந்தியாவின் மிக உயரமான இந்த கிறிஸ்துமஸ் மரம் இன்று முதல் ஜனவரி 2, 2018 வரை பாப்பிஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...