கார் வரி ஏய்ப்பு விவகாரம்: வேலைக்காரன் பட ”வில்லன்” போலீஸாரால் கைது

டிசம்பர் 25

கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை போலியாக முகவரி கொடுத்து புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும், காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத்பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுச்சேரி போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்த நிலையில், மலையாள நடிகர் பகத் பாசிலும், புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியைக் கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்தனர். 

இந்த நிலையில், வரி ஏய்ப்பு வழக்கில் நடிகர் பகத் பாசில் இன்று திருவனந்தபுரம் குற்றப்பிரிவில் ஆஜரானார். அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அங்கு கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பகத் பாசில் தனது தவறை ஒப்புக் கொண்டதாகவும், அதற்குரிய அபராத தொகையை கட்டிவிடுவதாகவும் கூறி உள்ளதாகக் கேரள ஊடகங்கள் கூறி உள்ளன.

பகத் பாசில் பிரபல இயக்குநர் பாசிலின் மகன் ஆவார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் வேலைக்காரன் படத்தில் இவர் வில்லனாக நடித்து உள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...