தமிழ் புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை, டிசம்பர் 29

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டாடுவது என மாநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகர் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன் தலைமையில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். 

இந்தச் செயற்குழு கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் மிகச் சிறப்பான முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வது, இந்த இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் செயலற்று கிடந்ததை வன்மையாகக் கண்டிப்பது, வருகின்ற தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை மாவட்டம் முழுவதும் கழகக் கொடியை கட்டி அனைத்து வட்டங்களிலும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் பல பகுதிகளில் பூங்காக்கள் பராமரிப்பு, சாலைகளை மேம்படுத்துதல், எரியாத 10 ஆயிரம் மின் விளக்குகளை சரிசெய்தல், இருகூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாதது போன்ற பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்துவது, கோவை மாநகராட்சி பகுதியில் உடனடியாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும், கோவை மாவட்டம் முழுவதும், ஏழை - எளிய குடும்பங்களை சேர்ந்த வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்ற முதியவர்கள், கணவனை இழந்தவர்களுக்கு, மாற்று திறனாளிகள், முதியோர் என அரசின் உதவி தொகைகள் வழங்காமல் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் செயற்குழு கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சிங்கை ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் உமா மகேஷ்வரி, பகுதி கழக செயலாளர்கள் சுந்தரம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள், தளபதி இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...