ஜல்லிக்கட்டு போராட்டக் கலவரம் தொடர்பாக வரும் 31-ம் தேதி கோவையில் 3-வது கட்ட விசாரணை

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி 3-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 25

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி 3-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் இறுதி நாள் கலவரத்தில் முடிந்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் கலவரம் தொடர்பாக, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் கோவை, சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

நீதியரசர் எஸ். ராஜேஸ்வரனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால், ஜல்லிக்கட்டு போராட்டக் கலவரம் தொடர்பான விசாரணை சிறிது நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 31-ம்தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் 3-ம் கட்ட விசாரணையை நடத்த இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...