தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் - கைது

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை, ஜனவரி 29

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.



தமிழக அரசு கடந்த 20-ம் தேதியன்று பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து, பேருந்துக் கட்டண உயர்வு 100 சதவிகிதம் உயர்த்தியிருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

தொடர்ந்து மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டமும், எதிர்கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் கட்டணத்தை சிறிது குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் ஒரு சில பைசா மட்டுமே குறைக்கப்பட்டது. 

என்றாலும் ஏழை- எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிந்த அளவிற்கு கட்டணத்தை குறைத்து இருப்பதாக முதலமைச்சர் கூறினார். இந்த கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசின் இந்த பேருந்து கட்டணக் குறைப்பை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. இந்த கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.



கோவை மாவட்டத்தில் வைசியால் வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல், பேருந்து நிலையம், சுந்தராபுரம், நஞ்சுண்டாபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், சிட்ரா, கணபதி, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் காவல்நிலையம் எதிரில் என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 



இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்த நிலையில் 2 அயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி:-

இதேப் போன்று பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் 44 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



மேலும், இதேக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக-வினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...