ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணை மத்திய அமைச்சரிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை : கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 



மத்திய வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் திட்ட அமைச்சர் ஹர்தீப் சிங்கை, தமிழக மாநகராட்சி நிர்வாகம்,  கிராம மேம்பாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அமைச்சர் எஸ்.பி. வேலுச்சாமி டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி நடவடிக்கைகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய அமைச்சரிடம் வழங்கினார். 



அந்தக் குறிப்பாணையில், நாட்டில் அதிக நகரங்கள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர்ப்புற உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் தண்ணீர் வசதி, நிலத்தடி கழிவுநீர், சாலை மற்றும் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 நகராட்சிகளும், 124 மாநகராட்சிகளும், 528 டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள நகர் பட்டியலில், தமிழகத்தின் 12 நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...