‘விறு விறு’ விற்பனை: கோவையில் அமோகமாக விற்பனையாகும் கரும்புசாறு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

மார்கழி கழிந்து தை பிறந்த போதிலும் குளிர் நம் கோவையை விடுவதாயில்லை. அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிரும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பகலில் பங்குனி மாதத்திற்கு நிகராக ‘பல்லைக்காட்டி’ சிரிக்கிறது வெயில்.,

இதனிடையே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அதிக அளவில் கரும்பு சாறுகளை பருகி வருகின்றனர். இளநீர் விலையை ஒப்பீடும் போது கரும்பு சாறு விலை குறைவாக உள்ளதால் விற்பனை அதிகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

"நாள் ஒன்றிற்கு சராசரியாக தினமும் 100 டம்பளர் விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது 200 டம்பளர் வரை விற்பனை ஆகிறது. 250 மில்லி கிராம் கரும்பு சாறு ரூபாய் 20 மட்டுமே ஆனால் இளநீர் , பழச்சாறு போன்றவை ரூபாய் 30 முதல் 100 வரை விற்கப்படுகிறது." என்றார் கரும்புசாறு வியாபாரி செல்வராஜ்.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு குளிர்பானங்கள் மீதான மோகம் குறைந்து இது போன்ற இயற்கை பானங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.டி ஊழியர் பெருமாள்சாமி கூறுகையில், "வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கரும்பு சாறு தினமும் அருந்துகிறேன். இதற்கு முன்னர் குளிர்பானங்கள் வாங்கி வந்தேன் ஆனால் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு இயற்கை பானங்கள் தான் அதிக அளவில் உபயோகிக்கிறேன்." என்றார்.

கரும்புசாறு உடலுக்கு மிகவும் நல்லது அதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அதிமாக உள்ளது. வெயில் காலங்களில் கரும்புச்சாறு அருந்தும் போது உடல் சோர்வடையாது. ஆனால், நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை மிகவும் குறைவாக தான் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...