"போலீசார் தாக்கியதால் தான் வாலிபர் பலியானார்..!" மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அமைப்பினர் மனு

போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


கோவை: போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



கடந்த மாதம் 22-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்றதாக சாகுல்ஹமீது, சையதுஇப்ராகிம் என்ற இருவரை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபர்கள் தப்ப முயன்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்ததால் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர்களை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், இருவருக்கும் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த அப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சாகுல்ஹமீது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், வாலிபர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைக்கும் போது லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததாகவும், போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் தான் சாகுல்ஹமீது உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து, வாலிபர் மரணத்திற்கு காரணமான மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மரணம் தொடர்பாக முறையான நீதி விசாரணை வேண்டியும் இன்று காலை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...