தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து பல மாவட்டங்களில் நீக்கப்பட்டு வருகின்றனர். இன்று திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 175 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களில் முன்னாள் எம்.பி. பி.குமாரசாமி (மாவட்ட துணை செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் இளம்வழுதி எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் பொன்னுதுரை, அழகுமலை, மாவட்ட மகளிர் அணி தலைவி தமிழரசி, சினாத் தேவர், வைகை பாலன், துரைராஜ், மதன்குமார் அழகுராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மேற்கண்டவர்கள் உள்பட 175 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...