திருப்பூரில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



தாராபுரத்தை அடுத்த தெக்காலூரில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் விடுதி மாணவியர் 60 பேர் இன்று காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, பின்னர் கல்லூரி பேருந்தில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிக்காக சென்றனர். அப்போது, மருத்துவமனை வளாகத்தினுள் வந்து இறங்கிய போது 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அவர்களை சக மாணவிகள் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



பின்னர், இது தொடர்பாக தகவலறிந்த மருத்துவமனை புறக்காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு மாணவிகளை ஒத்துழைக்க விடாமல் கல்லூரி முதல்வர் தடுத்ததால், மாணவிகளின் பெயரை கூட கூற மறுத்ததோடு சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு அதிரடியாக அங்கிருந்து மருத்துவர்களிடம் கூறாமல் கல்லூரி பேருந்தில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.



இதனைக் கண்ட காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரை எச்சரித்து, பேருந்தில் இருந்த மாணவிகளை சிகிச்சைக்காக திரும்ப அழைத்து சென்றனர். காலை உணவு ஒவ்வாத நிலையில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் செய்தி வெளியே சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கல்லூரி நிர்வாகம் கண்ணும், கருத்துமாக செயல்பட்டது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...