தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் அக்., 2-ம் தேதி தொடக்கம்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். ஏழை, எளிய மக்களுக்காக நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். 10 கோடி பேர் தலா 5 லட்சம் ரூபாய் அளவில் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கப்படும் என நிதி ஆயோக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்துக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை இதற்கான ப்ரீமியம் செலுத்த வேண்டியதிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...