கோவையில் 100 பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்த ஆர்வலர்கள்

கோவை வனப்பகுதியில் தன்னார்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 100 பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன.


கோவை: கோவை வனப்பகுதியில் தன்னார்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 100 பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன. 



கோவை வனத் துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களைக் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. 



கடந்த சனிக்கிழமை கோவை வனக் கோட்டத்தில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணி நேற்று முடிவடைந்தது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தன்னார்வலர்கள் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளைக் மேற்கொண்டனர். 



இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " கோவையின் பல்வேறு பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன. 79-ஆக இருந்த தட்டாம்பூச்சி இனங்கள் தற்போது 80-ஆக அதிகரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் வனத் துறையில் இருந்து 70 பேரும், பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் 30 பெரும் கலந்து கொண்டனர். 



இதில் பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கணக்கெடுத்த குழு 98 வகையான பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்தது" என்றார். 

பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் ஆரஞ்சு அவள்ட், எல்லோ பிரிஸ்டட் பிளாட், நீலகிரி டைகர் போன்ற அறிய வகை பட்டாம்பூச்சிகள் தென்பட்டன. 

அதிக பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்த மற்றும் புகைப்படம் எடுத்த குழுவினருக்கு கோவை வனக் கல்லூரியில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...