தள்ளுவண்டிக் கடை நடத்த அனுமதி தாருங்கள்..! - குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்

தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு பல்வேறு பகுதிகள் வசித்த வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2800 வீடுகளில் சுமார் 2000 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 



குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் சிலர் தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். 

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிகத்திற்கு கடைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு ரூ.2500 என அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வாடகைக்குத் தனியார் பெற்றுள்ளனர். இந்த குடியிருப்பில் வசிக்கும் பலர் தள்ளுவண்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், வணிக வளாகங்களில் கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளுக்குச் சாதகமாக பேசுகின்றனர். இங்கு வசிப்பவர்கள் ஏழ்மையான நிலையில் உள்ளதால் வெள்ளலூர் குடிசை மாற்று வாரியத்தில் தள்ளுவண்டி வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...