தாராபுரம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 15 ஆடுகள் பலி

தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.

திருப்பூர்: தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.

கோவில்பாளையம் நடுத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி வெங்கிடம்மாள். கணவரை இழந்து தனியாக வசித்துவரும் இவர் 30 ஆடுகளும் 5 மாடுகளும் வளர்த்து வருகிறார். தற்போது மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் காய்ந்து போயிருப்பதால் வெங்கிடம்மாள் தனது கால்நடைகளுக்குத் தீவனமாக கழிவு பஞ்சுகளை கிலோ 15 ரூபாய் விலைகொடுத்து வாங்கி ஆடு, மாடுகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு வெங்கிடம்மாள் தனது ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். திடீரென அதிகாலையில் ஆடுகள் பலத்த சத்தம் போடுவதை கேட்ட அவர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது பட்டிக்குள் இருந்த ஆடுகளை மூன்று வெறிநாய்கள் கடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரின் உதவியோடு நாய்களை விரட்டினார்.



தொடர்ந்து, பட்டிக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 15 ஆடுகள் பலியாகியதும் மேலும் 5 ஆடுகள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், கணவரை இழந்த தனக்கு கால் நடைகள் தான் வாழ்வாதாரமாக இருந்தது என்றும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிர்ழந்ததால் தமிழக அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...