ஈரோடு - திருச்சிக்கோட்டை இடையிலான ரயில்தடங்கள் நாளை ஆய்வு

ஈரோடு - திருச்சிக்கோட்டை ரயில்நிலையம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே, ஏ, மனோஹரன் நாளை (பிப்.,07) ஆய்வு செய்கிறார்.


ஈரோடு - திருச்சிக்கோட்டை ரயில்நிலையம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே, ஏ, மனோஹரன் நாளை (பிப்.,07) ஆய்வு செய்கிறார்.

நாளை காலை சுமார் 9.30 மணிக்கு ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஈரோடு மற்றும் திருச்சிக்கோட்டை ரயில்நிலையம் இடையே உள்ள ரயில்தடங்களை ஆய்வு செய்த பிறகு, மதியம் சுமார் 2 மணியளவில் கரூரிலும் அவர் ஆய்வு செய்ய உள்ளார். பின்னர், திருச்சிராப்பள்ளி ரயில்நிலையத்திற்கு மாலை சுமார் 5.00 மணி அளவில் சென்றடைகிறார்.

மறுநாள் (பிப்.,08) காலை 09.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள ரயில்தடங்களை பார்வையிடும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே, ஏ, மனோஹரன், மாலை 5.00 மணியளல் ஈரோடு செல்கிறார். 

இரண்டாம் நாளன்று அவர் திருச்சிக் கோட்டை மற்றும் ஈரோடு ரயில்நிலையங்களுக்கிடையே அதிவேக ரயிலியக்க சோதனை நடத்த உள்ளதால், மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணிக்குட்பட்ட நேரத்தில் யாரும் ரயில்தடத்தின் அருகில் செல்லாமலும், ரயில்தடத்தை கடக்க முயலாமலும் இருக்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இந்த ஆய்வின் போது, அவருடன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்சர் வர்மா, தெற்கு ரயில்வே முதன்மை மின்பொறியாளர் எஸ், ராமசுப்பு, தெற்கு ரயில்வே தலைமை ரயில்வே மின்மயமாக்கல் திட்டப் பொறியாளர் நாகேந்திரபிரசாத், சேலம் கோட்ட முதுநிலை மின் பொறியாளர் எம். பிரபாகரன், கரூர் துணைத்தலைமை மின்மயமாக்கல் மின்பொறியாளர் டி.சி.ஜான்சன், இதர சேலம் கோட்ட அதிகாரிகளுடன், தெற்கு ரயில்வே மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...