பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் இருந்து பொருட்களை கொள்ளையடிக்கும் மர்மகும்பல்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக போலீஸார் பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக  உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரால்  பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



ரேசன் அரசி கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்யும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும். பல வாகன உரிமையாளர் பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை திருப்பி எடுப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வாகனங்களை ஏலம் விடப்படுகிறது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஏராளமான வாகனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்து செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசி கடத்தலில் ஈடுபட்ட மாருதி வேன் (KL.8.V.5364) பதிவு எண் கொண்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், அதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பானை (ஹார்ன்) மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இதேபோல, பல வருடங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கார் ஒன்றில் இருந்து டயர் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும்போது, காலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் அங்கு நடமாடி வந்தனர். அதற்கு, முன்னதாக, வேனில் ஒலி எழுப்பான் இருந்ததைக் கண்டேன். கருவூலதிற்கு வந்தவர்களாக இருக்கலாம் என்பதால், அங்கிருந்து சென்று விட்டனர். மாலையில், தன்னுடைய வாகனத்தை எடுக்க வந்தபோது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், ஒலி எழுப்பானை திருடி சென்றது தெரிய வந்தது. என்றார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...