திருப்பூரில் கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருப்பூரிலிருந்து கரூரில் உள்ள சேரன் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பேருந்தை சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ஒட்டிச் சென்றார். ஒலப்பாளையம் அருகே தஞ்சாவூரிலிருந்து வந்த ஆம்னி காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஜெயராஜ் (34), கடலூரைச் சேர்ந்த ராஜேஷ் (22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

காரில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன் (34) படுகாயமடைந்து ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் காங்கேயம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...