சீரான குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை: கோவை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கண்ணம்நாயக்கனூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த மதுக்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கிணற்றைத் தூர்வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, கலைந்து சென்றனர். சீரான குடிநீர் வழங்கக் கோரி சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பேருந்துகள் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...