ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளை தொடங்கி வைத்தார் எஸ்.பி. வேலுமணி

கோவை மாநகராட்சியின் 76-வது வார்டு பகுதியில் ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் 76-வது வார்டு பகுதியில் ரூ. 73 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

தெற்கு மண்டலம் 76-வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் மற்றும் எம்.எம்.ஆர். கார்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வள்ளலார் நகர் மற்றும் குழந்தை நாயக்கர் வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 42 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையையும் அவர் ஆரம்பித்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...