கோவையில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தன. இதுவரை 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.



கோவை: கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தன. இதுவரை 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 




கோவை வனச்சரகப் பகுதிகளில் உள்ள 25 குளங்களில் வன அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சதுப்பு நிலங்களில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பில் பறவைகளின் இனங்கள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. முதல் நாள் கணக்கெடுப்பின் போது, 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 48 இனங்கள் ஈரமான நிலத்தில் வாழ்பவையாகும். 78 இனங்கள் சதுப்பு நிலங்களில் வசிப்பவையாகும். அனைத்து குளங்களிலும் கணக்கெடுத்ததன் அடிப்படையில், முதல்நாளில் மட்டும் 6,620 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.




அதிகபட்சமாக அச்சன்குளம் குளப்பகுதியில் மட்டும் 75 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டன. இதேபோல, குறிஞ்சி குளப்பகுதியில் 884 பறவைகள் கணக்கிடப்பட்டன. 




முன்னதாக, இது தொடர்பான நிகழ்ச்சி தமிழ்நாடு வனத்துறை வளாகத்தில் நடைபெற்றது. அதில், பறவைகளை கணக்கெடுக்கும் தன்னார்வலர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணியின் நடுவே, சிறந்த புகைப்படங்களை எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...