மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை ஸ்ருதி

திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை: திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ருதி மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலத்தைச் சேர்ந்த பால முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து நடிகை ஸ்ருதி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. 

இதனிடையே நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கிலும், கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஸ்ருதி, சித்ரா ,பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் நடிகை ஸ்ருதியை நாகப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கான உத்தரவைச் சிறையில் உள்ள நடிகை ஸ்ருதியிடம் போலீசார் வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் நாகப்பட்டினம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுவரை நடிகை ஸ்ருதி அடுத்தடுத்து 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...