கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்டது ஓவேலி பேரூராட்சி. இங்குள்ள 18 வார்டுகளில் 48 சிறிய கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் 24,793 பேர் வசித்து வருகின்றனர். இதில் 60 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், 35 சதவிகிதம் பிற வகுப்பினரும், 5 சதவிகிதம் பழங்குடியினரும் வசித்து வரும் இந்தக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இப்பேரூராட்சி செக்ஷன் - 17 நிலத்தில் உள்ளதால், அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வனத்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, 2006-ம் ஆண்டுக்குப் பின்னர், இப்பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், ‘அடிப்படை வசதிகள் மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் கொடுத்ததால் சாலை, நடைபாதை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

ரூ.4.5 கோடி ஒதுக்கீடு

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர், நடைபாதை, தெரு விளக்கு மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான டெண்டர் நேற்று நடந்தது.

இது தொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால் கூறுகையில், "ஓவேலி பேரூராட்சியில் 2006-ம் ஆண்டுக்குப் பின்னர் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டது. இப்பணிகளுக்கான உத்தரவு, வரும் 16-ம் தேதி வழங்கப்படும். அன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "நடைபாதை, தெரு விளக்கு இல்லாமல் வன விலங்குகள் நடமாட்டத்தால் சிரமப்பட்டு வந்தோம். தற்போது, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி நிறைவேற்றப்பட உள்ளதால், விடிவு பிறந்துள்ளது" என்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...