பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - வனத்துறை அமைச்சர்

பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை அவர் கூறுகையில், " டான்டீ தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

விரைவில், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேரம்பாடி தனியார் எஸ்டேட்டில் அயனிபாலா மரங்கள் வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த மரங்கள் இயற்கையாக வளர்ந்தவை என்பதால், அந்த மரங்களை வெட்டத் தடை விதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் மனித விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. விலங்குகளால், மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விலங்குகள் தாக்கி, உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழிகள் வெட்டப்படுகின்றன. கரடி, சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கூண்டுகள் வைத்துப் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...