கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் திடீரென பெய்த பரவலான மழையால், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி : கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் பரவலான மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 



கடந்த இரு மாதங்களாக நீலகிரியில் கடும் பனிபொழிவு நிலவி வந்தது. இதனால், வனங்களில் பசுமை குறைந்து வறட்சி தலைதூக்கியது. விவசாய நிலங்களிலும் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் மழையை எதிர் நோக்கி காத்திருந்தனர். கடந்து இரு தினங்களுக்கு முன்பு இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் உதகை, கோத்தகிரி, முதுமலை பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கன மழை பெய்ததால், வறட்சியின் பிடியிலிருந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வந்த வனத் தீ அபாயம் நீங்கியது. 

முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள், மசினகுடி வனப்பகுதியிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பூமி நனைந்து பகல் நேரத்தில் நிலவி வந்த வெட்பம் தணிந்து ரம்மியமான காலநிலை நிலவியது. இதை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். மழை பெய்ததால், விவசாயிகள் விதைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்இருப்பு அதிகரித்து, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...