ஜெ., விசாரணை ஆணையம் செயல் இழந்துவிட்டது : தினகரன் ஆதரவாளர்கள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல் இழந்து விட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல் இழந்து விட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

டிடிவி தினகரன் அணியின் சார்பில் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தினகரன் ஆதரவாளர்கள் புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இன்று கோவை வந்தனர். காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது :- கோவையில் காவல்துறை மூலம் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி இருப்பதைப் போல இருக்கின்றது. கூட்டம் நடத்துவதற்கு கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. உள்ளுர் அமைச்சர் வேலுமணியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகின்றது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கொன்றதற்கு ஆதாரம் இருப்பதாக சொன்ன மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன் ஆகியோரை ஏன் விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கவில்லை. அதேபோல, தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர் செல்வத்தையும் ஏன் அழைத்து விசாரணை ஆணையம் விசாரிக்கவில்லை. மருத்துவமனைக்கே போகாத தீபா, மாதவன், கார் ஓட்டுநர் போன்றவர்களை அழைத்து விசாரணை ஆணையம் விசாரிக்கின்றது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல் இழந்து விட்டது. 

.

நீட் தேர்விற்காக அ.தி.மு.க., எம்.பி.கள் போராட்டம் நடத்த வேண்டும். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர வேறுயாரும் சசிகலா, தினகரன் குறித்து தவறாகப் பேசுவதில்லை. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கூட இவர்களைத் தவறாக பேசுவதில்லை. விரைவில் மூன்றாவது முதலமைச்சரையும் சசிகலா தேர்வு செய்வார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆட்சி பிடிக்காததால், இயற்கை அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. கோவில்களில் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுகின்றது.  

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து சொன்ன "இம்போடன்ட்" என்ற வார்த்தையை சொல்லிய விஷயத்திற்காக  குருமூர்த்திக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் பாராட்டு விழா நடத்த அனுமதிக்காததால் கோபமாக இருக்கின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...