மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு : தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை : 9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் யேசுதாஸ் (57). இவருக்கு 9 வயதுடைய மகள் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய யேசுதாஸ், கடந்த 2 ஆண்டுகளாக தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மதுவுக்கு ஆசைப்பட்டு, நண்பர் பிரேம்குமார் என்பவரிடமும், தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இவர்கள் இருவரும் தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோரின் ஆசைக்கும் சிறுமி சிக்கித் தவித்து வந்துள்ளார். 

இந்தத் தொந்தரவுகளை தாங்க முடியாத சிறுமி, ஒருகட்டத்தில் இது தொடர்பாக, தனது பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தைகள் நல வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து, காப்பகத்தில் சேர்க்க உதவி செய்தார். தனக்கு நேர்ந்த சம்பவங்களால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, சுமார் 2 மாதங்களாகப் பேச முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், 02.01.2015 ஆம் தேதியன்று காப்பகம் மற்றும் குழந்தைகள் நலவாரியம் சார்பில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், சிறுமியின் தந்தை யேசுதாஸ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார்.  

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...