கோவையில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரூப்- 4 வினாத்தாள்கள்

சூலூரில் உள்ள அரசு கருவூலத்தில் குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை: சூலூரில் உள்ள அரசு கருவூலத்தில் குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நாளை குரூப் - 4 தேர்வு நடைபெற உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அந்த பகுதியில் 11 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கும் இந்த தேர்வுக்கு நேற்று மாலை வினாத்தாள்கள் சூலூர் வந்தடைந்தன. அந்த வினாத்தாள்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன. 6 மணிக்கு கருவூலத்தில் வைக்கப்பட்ட வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்தது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், இதனால் வினாத்தாள்கள் சேதப்படுத்தப் படுத்தப்படுவதற்கோ, அல்லது திருடு போவதற்கோ வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர். 

இந்த நிலையில், வினாத்தாள்களுக்கு முறையாகப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சூலூர் வட்டாட்சியர் பக்தவச்சலம் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வாளர் தங்கராஜிடம் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...