மாநகருக்கு வெளியே தலைதூக்கியுள்ள பேனர் கலாச்சாரம் : கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்...?

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் கலாச்சாரங்கள் கட்டுக்குள் வந்தாலும், மாநகருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் கலாச்சாரங்கள் கட்டுக்குள் வந்தாலும், மாநகருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை சந்திப்புகளில் விளம்பரப் பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இவற்றை நகரமைப்பு பிரிவினர் அகற்றினாலும், அனுமதியின்றி மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன. அதனால், விளம்பர பலகைகளுக்கான இரும்பு ஆங்கிள்களையும் வெட்டி அகற்ற மாநகராட்சி தனி அலுவலர்  உத்தரவிட்டார். இதையடுத்து, மண்டலம் வாரியாக அனைத்து பகுதிகளிலும், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வந்தன.

அவினாசி சாலையில் ஆர்.ஜி. புதுார், ஹோப்ஸ், சித்ரா சந்திப்பு, விமான நிலைய சாலை, தடாகம் சாலை - இடையர்பாளையம் சிக்னல், பி.என். புதுார், அவினாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம், போத்தனுார் - நஞ்சுண்டாபுரம் சாலை உள்ளிட்ட 50 இடங்களில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இரும்பு ஆங்கிள்கள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டன.



கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் முதல் நேற்று வரை 6,184 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாம். இது தொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, விபத்துக்கும் வழிவகுக்கின்றன. அவற்றை அகற்றுவதோடு, மீண்டும் வைக்காமல் இருக்க இரும்பு ஆங்கிள்களையும் அகற்றி வருகிறோம். இந்நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார். 

இவ்வளவு விளம்பரப் பலகைகளை அகற்றியுள்ளதாக நகரமைப்புப் பிரிவினர் கூறினாலும், மாநகராட்சி எல்லைக்குள் அவினாசி சாலை, திருச்சி சாலை, ஆத்துப்பாலம், பாலக்காடு சாலை, சத்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தனியார் இடங்கள் மற்றும் கட்டடங்களின் மீது பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் இன்னும் இருப்பது கண் கூடாகத் தெரிகிறது. மாநகராட்சி எல்லைக்கு வெளியிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. அனைத்தையும் அகற்ற வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தினுடையது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...