ஆணவக் கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை உயிரிழப்பு : உடலை வாங்க மறுப்பு

பழனியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை தற்போது உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உள்ளனர்.

பழனியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை தற்போது உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உள்ளனர்.

 

பழனியில் கடந்த 2014ஆம் ஆண்டு முத்துகுமார் என்பவர் வேறுபிரிவினரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இதனால், அவரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கொடைக்கானலில் பணியில் இருந்த முத்துகுமாரின் தந்தை பரமசிவம் நினைவு இழந்து கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். பரமசிவத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.  

இதனிடையே, முத்துக்குமார் ஆணவ கொலை வழக்கை எவிடென்ஸ் அமைப்பின் கதிர் நடத்தி வருகிறார். தற்போது, பரமசிவத்தின் மர்ம மரணத்தின் பின்னணி கண்டறியப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்து உள்ளார். பிண கூராய்வினை வீடியோ எடுக்க வேண்டும், இரண்டு மருத்துவர்கள் அதில் ஈடுபட வேண்டும், மருத்துவ பரிசோதனை அறிக்கை உடனடியாக வெளியிடப் படவேண்டும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...