பிப்.,12-ம் தேதி முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பைத் திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் புதிய டெண்டர் முறையைக் கைவிட வேண்டும், கடந்த காலங்களில் நடைபெற்றது போலவே டெண்டர் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி, டேங்கர் லாரிகளின் போராட்டம் நடைபெற்றால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...