கோவையில் சாலையை மறித்து கட்டப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் நிகழும் விபத்துகள்

கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை - சத்தியமங்கல் சாலையில் உள்ள சரவணம்பட்டி என்ற பகுதியில் காப்பிக்கடை என்னும் இடம் உள்ளது. அங்கு, ஆளுங்கட்சியினர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்கப்படுவதே சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவழிச்சாலையை மறித்து அந்தப் பேனர் கட்டப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் ஒருவழிப் பாதையை மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது டெம்போ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும் அரசின் சார்பில் இருவழிச்சாலைகள் அமைக்கப்படும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இதுபோன்று சாலைகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...