நடிகர் ரஜினியின் காலா திரைப்படம் ஏப்., 27-ம் தேதி ரிலீஸ்

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தப்பி செல்லும் ரஜினிகாந்த், அங்கு சக்தி வாய்ந்த டானாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்களுக்கு காலாவாக அவர் இருக்கிறார்.

வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில், காலா படத்தின் வெளியீடு தேதி இன்றிரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி, காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகவிருக்கும் முதல்படம் என்பதால், காலா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...