மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர் பெத்தி செட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.



இந்நிலையில், தினமும் குடி போதையில் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கூறுவதோடு, பள்ளி நேரத்தில் அங்குள்ள நிழற்குடையின் கீழ் போதையில் படுத்து இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணியிடம் புகார் அளித்தனர். 



இதனைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணி மற்றும் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் கென்னடி குடிபோதையில் இருந்ததோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய கூறுவது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், " பள்ளிக்கு வந்த சிறிது நேரத்திலே பள்ளியின் வெளியில் உள்ள நிழற்குடைக்கு வந்து விடுவார். அங்கு சிகிரெட் குடித்து விட்டுப் படுத்து உறங்கி விடுவார். நாங்கள் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை." என்றனர். 

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் ஏற்கனவே பணியாற்றி வந்த இரண்டு பள்ளிகளில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களின் பெற்றோரால் தர்ம அடி கொடுக்கப்பட்டு , மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...