கோவையில் மலிவு விலையில் எல்.இ.டி. விளக்குகள் விற்பனை தொடக்கம்

பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.

கோவை: பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.

முத்ரா வங்கி மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மத்திய அரசின் சலுகைகள் பெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும், கணபதி பகுதியில் பா.ஜ.க., பிரமுகர் தொடங்கியுள்ள மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகள் தொடர்பான விளக்கம் இந்த முகாமில் தெரிவிக்கப்பட்டது. சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாகும் பல்புகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை அறிமுகம் செய்துள்ளது. 

ஆதார் அட்டையின் நகலைக் கொடுத்து மானிய விலையில் இதனை வாங்கிக்கொள்ளலாம் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த முகாமில், கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...