திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் உமா தொடங்கி வைத்தார். பல்லடம் ரோட்டரி பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி கலந்து கொண்டார். 

மேலும், பல்லடம், மங்கலம், அவினாசிபாளையம், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



முகாமில் கலந்து கொண்டவர்களுக்குப் பொன்னி மற்றும் ராஜேஷ்வரி ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்திறன், கண்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுப் பரிசோதனை, எலும்பு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி ஆலோசனை வழங்கினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...