பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - கேரளா நிதியமைச்சர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ஜி.எஸ்.டி குழு உறுப்பினரும் , கேரள நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் திருப்பூர் வந்துள்ளார். இதனையொட்டி திருப்பூரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திருப்பூர் போன்றே சூரத், லூதியானா போன்ற பின்னலாடை நகரங்களும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. 

பாதிப்படைந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தாராள பொருளாதார கொள்கையால் வெளிநாட்டினர் எளிதாக இந்தியாவில் தொழில்துவங்க வசதியாகும். அதனை இந்திய தொழில் நிறுவனங்கள் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் துறையினர் ஜி,எஸ்.டி வரிவிதிப்பில் பின்னலாடைத் துறையினருக்கான சலுகைகளைப் பரிந்துரைக்க வேண்டும்." என்றனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...