உடுமலையில் இந்திய அளவிலான கராத்தே போட்டிகள்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. 

நேற்று தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்தும் வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 



வயது மற்றும் எடை ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தா மற்றும் குமிட்டே பிரிவில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்குச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. 

மாணவர்களிடையே தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...