வெள்ளகோவில் பகுதியில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை: மருத்துவ அலுவலர்களைக் கைது செய்யக் கோரி சக ஊழியர்கள் போராட்டம்

வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.



திருப்பூர்: வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ அலுவலர்கள் ஏற்படுத்திய மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும், அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கேயம் தாலுகா வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் செவிலியர் மணிமாலா (26). இவர் பள்ளி மாணவர்களுக்கான உடல் பரிசோதனை முகாமில் தனது மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரியுடன் பணியாற்றி வந்தார்.

இவர்களுக்குத் தலைமை மருத்துவராகத் தமயந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் மணிமாலா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைபற்றி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் மணிமாலாவை தற்கொலைக்குத் தள்ளிய மருத்துவ அலுவலர்கள் தமயந்தி, மற்றும் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை கைது செய்து பணி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மணிமாலாவின் உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...