சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி திருப்பூரில் கைது

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



திருப்பூர்: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் நொண்டி முருகன் (எ) முருகன். அபிராமபுரம் காவல் நிலையத்தில் இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளுக்காகச் சிறை சென்றும் வந்துள்ளார். இந்நிலையில், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் அபிராம்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியிலுள்ள அவரது மகன் மணிகண்டன் வீட்டில் முருகன் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார் நேற்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் முருகனின் மனைவி செல்வி, போலீசார் பொய் வழக்கு போட்டு தனது கணவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும், தங்கள் வாழ்க்கை நிலைகுலைந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...