கோவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

கோவையில் உள்ள ஏ.டி.எம். மைத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த மர்ம நபர் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் உள்ள ஏ.டி.எம். மைத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த மர்ம நபர் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் அருகே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பணம் எடுப்பது போல ஏ.டி.எம் மையத்திற்குள் முகத்தை மறைத்தபடி சென்றுள்ளார்.

பேக்கிற்குள் மறைத்து வைத்திருந்த கம்பியால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த சப்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர் விளக்கு போட்டு பார்க்கும்போது கொள்ளையடிக்க வந்த நபர் தப்பிவிட்டார்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் பதிவாகியுள்ள கை ரேகைகள் மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

கோவையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காளப்பட்டி சாலை மற்றும் அவினாசி சாலையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஏ.டி.எம் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...