வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் ஒருவர் பலி: பொதுமக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார்.

கோவை: வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார். 

வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சூசை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது சகோதரர் இருதயராஜூடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சூசை மாயமானார். இருதயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது நேற்று இரவு 9.30 மணிக்கு வாட்டர்பால் எஸ்டேட் ஆண்டிவீரன் வனப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.



இது தொடர்பாக வால்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச்சரகர் சக்திவேல், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, காவல்துறை ஆய்வாளர் திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நள்ளிரவு 1 மணிக்கு உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.



அப்போது, சூசை கரடி தாக்கி இறந்தது தெரியவந்தது. உயிரிழந்த சூசை தனது தாயாரின் கல்லறைக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சூசையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கரடி தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...