ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பொதுமக்கள் மனு

மழை நீர் செல்லும் ஓடைப்பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: மழை நீர் செல்லும் ஓடைப்பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "குருடிமலையில் இருந்து வரும் நீரானது கதிர்நாய்க்கன்பாளையத்தில் உள்ள கல்லணைகளில் நிரம்பி எங்கள் பகுதியில் உள்ள ஓடைப்பள்ளத்தின் வழியாக புதுப்பாளையம் அணைக்குச் சென்றடைகிறது. தற்போது இந்த ஓடையில் பெட்டிக்கடை, இறைச்சிகடை என ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 

மேலும், இறைச்சி கழிவு, குப்பைகள் என ஓடையில் கொட்டப்படுகின்றது. கழிவு நீர் சுழற்சிக்கு அமைக்கப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அந்த நீர் வழிந்து செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...