உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் விதிகளை மீறியும், லஞ்சம் வாங்கிக் கொண்டும் பணி நியமனங்கள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...