'காலா' படத்தின் சண்டைக் காட்சிகள் இணையதளத்தில் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’காலா’ மற்றும் ’2.0’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படம் 'காலா'. இருவரது கூட்டணியில் வெளிவந்த 'கபாலி' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. முதலில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் '2.0' படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால், 'காலா' படம் முதலில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. 

இரு தினங்களுக்கு முன்னர் படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என அறிவித்திருந்தார். இதனால், இப்போதிலிருந்தே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. அதில், ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக் குழு அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும், 25 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிகள் எடிட்டிங் சமயத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...