கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்களால் விபத்து

கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்கள் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவை: கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்கள் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார். 

கோவை அவினாசி சாலையில் இன்று காலை கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது. அதில் மூன்று வாலிபர்கள் மது அருந்திக் கொண்டே வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கார் லட்சுமிமில்ஸ் சந்திப்பு பகுதியில் சென்ற போது முன்புறமாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குல் சிகிச்சைக்காக அனுப்பினர்.  இந்த நேரத்தில் காரில் இருந்த இரண்டு வாலிபர்கள் தப்பியோடிய நிலையில் ஜெகன் என்ற கல்லூரி மாணவர் மட்டும் பொதுமக்களிடையே பிடிபட்டார். 

ஜெகனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தப்பியோடிய இருவரும் கரூரை சேர்ந்த அசோக் மற்றும் கோவை சேர்ந்த நந்து என்பதும், மூன்று பெரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. 

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...