எல்.ஜி.பி. நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கை கட்டுப்படுத்த வேண்டி ஆட்சியரிடம் மனு

கோவையில் இயங்கி வரும் எல்.ஜி.பி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் தொழிலாளர் வோரோதப்போக்கை கட்டுப்படுத்த அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் இயங்கி வரும் எல்.ஜி.பி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் தொழிலாளர் வோரோதப்போக்கை கட்டுப்படுத்த அந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



கோவை வையம்பாளையத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பி ரோலான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இயங்கி வரும் இதே நிறுவனத்தின் கிளையில் பணி புரிபவர்களுக்கு ரூ.8000 கூடுதலாக சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. அதேபோல் கோவையில் இயங்கும் நிறுவனத்திற்கும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவன ஊழியர் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் அவர் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பந்த் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

இந்த சூழலில், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்கள் ஏ.ஐ.சி.சி.டி.யூ. அமைப்பில் சேர்ந்துவிட்டனர் என்ற காரணத்தால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 6 பேரை பந்த நகருக்கு இடமாற்றம் செய்துவிட்டதாக கூறியும், பணி நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...